செய்திகள்
போக்குவரத்து விதிகளை மீறியதாக ராமநாதபுரத்தில் 555 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக ராமநாதபுரத்தில் 555 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.76 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அதிக வேகத்தில் சென்றதாக 2 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 18 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக ஒருவர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றதாக 3 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 335 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 86 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 16 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 94 பேர் மீதும் என மொத்தம் 555 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.76 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டு உள்ளது.