செய்திகள்
விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேர் கைது
மதுபோதை தகராறில் விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்த வடமாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அந்த கும்பல் திடீரென இரும்பு கம்பியால் அவர்களை தாக்கியதோடு, 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. உடனே இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான புகாரின்பேரில் கோட்டார் பெரியவிளையை சேர்ந்த ராஜா என்ற வடிவேல் (47), இறச்சகுளம் பேச்சான்குளத்தை சேர்ந்த அஜித் (28) மற்றும் முளகுமூடு பறைக்கோட்டை சேர்ந்த ஜோஸ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்த வடமாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அந்த கும்பல் திடீரென இரும்பு கம்பியால் அவர்களை தாக்கியதோடு, 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. உடனே இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான புகாரின்பேரில் கோட்டார் பெரியவிளையை சேர்ந்த ராஜா என்ற வடிவேல் (47), இறச்சகுளம் பேச்சான்குளத்தை சேர்ந்த அஜித் (28) மற்றும் முளகுமூடு பறைக்கோட்டை சேர்ந்த ஜோஸ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.