செய்திகள்
கவிஞர் வைரமுத்து

தேசியக்கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் - கவிஞர் வைரமுத்து

Published On 2020-08-01 06:33 GMT   |   Update On 2020-08-01 06:33 GMT
தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில்  கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கை தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்.

என பதிவிட்டுள்ளார்.




Tags:    

Similar News