ஆன்மிகம்
பண்ருட்டி அருகே கலியுகவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது
பண்ருட்டி கலியுகவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்கிறது.
பண்ருட்டி அருகே சேமக்கோட்டை வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள கலியுகவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை, மூலஸ்தான அபிஷேகம், ஹோமங்கள், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால பூஜை, கோ பூஜை, பிரதான ஹோமங்கள், பூர்ணாகுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள், வள்ளுவர் வீதி கிராம வாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால பூஜை, கோ பூஜை, பிரதான ஹோமங்கள், பூர்ணாகுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள், வள்ளுவர் வீதி கிராம வாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.