செய்திகள்
தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை

Published On 2021-09-17 09:38 GMT   |   Update On 2021-09-17 09:38 GMT
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

செல்லூர் தியாகி பாலு தெருவைச் சேர்ந்த நல்லதம்பி மனைவி கலைச்செல்வி (வயது 35). இவருக்கு வயிற்று வலி இருந்தது. அகிம்சாபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை எடுத்து வந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த கலைச்செல்வி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தேனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (40). இவருக்கு மனைவி பிரியா உள்ளார். கரும்பாலை இந்திரா நகரில் மோகன் டயர் நிறுவனம் நடத்தினார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன் டயர் நிறுவனத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தல்லாகுளம், சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் செல்வ பாண்டி (44). இவருக்கு மனைவி ஆஷா உள்ளார். செல்வபாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருநகர் தமிழினி தெருவைச் சேர்ந்தவர் ராம்விக்னேஷ் (வயது 29). இவருக்கு தலை வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும், நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News