செய்திகள்
கோப்புபடம்

தேவனூர்புதூரில் குறுகலான சாலையால் விபத்து அபாயம்

Published On 2021-09-14 05:07 GMT   |   Update On 2021-09-14 05:07 GMT
சாலையின் இருபுறங்களிலும் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
உடுமலை;

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது தேவனூர்புதூர். கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது. தேவனூர்புதூரில் இருந்து செல்லப்பம்பாளையம் வழியாக செல்லும் சாலையில் உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சாலை நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட எல்லை வரை பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது.

சாலையின் இருபுறங்களிலும் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. 

அப்போது, வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் பஸ், லாரி உட்பட வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள்  நிலைதடுமாறி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.  

சாலை குறுகலாக இருப்பதால் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தேவனூர்புதூரில் இருந்து செல்லப்பம்பாளையம் வழியாக செல்லும் சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் சாலையோரத்தில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News