ஆன்மிகம்
திருச்சேறை திருத்தலம்

வறுமையும், கடன்களும் தீர வழிபட வேண்டிய கோவில்

Published On 2021-04-03 09:28 GMT   |   Update On 2021-04-03 09:28 GMT
11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டரில் உள்ளது, திருச்சேறை திருத்தலம். இங்கு செந்நெறியப்பர் கோவில் அமைந்துள்ளது.

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப்பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் இந்த ஆலயத்தில் அருளும் செந்நெறியப்பரை வணங்கலாம் என்கிறது தல வரலாறு.

இதனால்தான் இந்த இறைவனை ‘ரிண விமோஷன லிங்கேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள். 11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
Tags:    

Similar News