ஆட்டோமொபைல்
டாடா சபாரி முன்பதிவு மற்றும் இதர விவரங்கள் வெளியீடு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் முன்பதிவு மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு பிப்ரவரி 4 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய டாடா சபாரி அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடலாக அறிமுகமாகிறது. இந்த மாடல் ஆறு வேரியண்ட் மற்றும் மூன்றுக்கும் அதிக நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக புதிய சபாரி மாடல் கிரவிடாஸ் எனும் பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இது ஹேரியர் எஸ்யுவி-யின் மூன்றடுக்கு வேரியண்ட் ஆகும். இதனால் இரு மாடல்களிடையே பெரும்பாலான அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் ஒரே மாதிரி காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய சபாரி மாடலில் டிரை-ஏரோ மெஷ் கிரில், பிளேர் செய்யப்பட்ட வீல் ஆர்ச்கள், பெரிய ஒவர்ஹேங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.