செய்திகள்
புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, அய்யம்பாளையம் காட்டூரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:
புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, அய்யம்பாளையம் காட்டூரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், வாங்கல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.