செய்திகள்
கோப்புப்படம்

இருக்கன்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை

Published On 2019-11-13 07:38 GMT   |   Update On 2019-11-13 07:38 GMT
இருக்கன்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விருதுநகர்:

தூத்துக்குடி சேதுராஜா தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 55). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக சாத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

பின்னர் நேற்று மாலை ஊருக்குச் செல்வதாக புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் தூத்துக்குடிக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் சாத்தூர் கோவில்பட்டி இடையே இருக்கன்குடி ரெயில்வே தண்டவாளம் பகுதியில் ஒரு பெண் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.

தூத்துக்குடி ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்தவர் ராமலட்சுமி என தெரியவந்தது.
Tags:    

Similar News