செய்திகள்
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வக்கீல் பலி
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வக்கீல் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்;
கரூர் அருகே உள்ள புத்தாம்பூர் பகுதிக்குட்பட்ட வடுகப்பட்டியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 38). வக்கீலான இவர், ஆட்டையம்பரப்பு பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பைபாஸ் மெயின் சாலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயக்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விஜயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.