லைஃப்ஸ்டைல்
வெற்றிலை துளசி சூப்

சளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்

Published On 2020-08-03 05:40 GMT   |   Update On 2020-08-03 05:40 GMT
சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை, துளசி சேர்த்து சூப் தயாரித்து பருகலாம், இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கப்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி - 1 டீஸ்பூன்
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை - 6 இலைகள்
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு
புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - ஒன்று
சிவப்பு மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை

துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.

நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

சூப்பரான வெற்றிலை துளசி சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News