செய்திகள்
வழக்கு

வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு

Published On 2019-10-01 17:04 GMT   |   Update On 2019-10-01 17:04 GMT
வேதாரண்யம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் வடமழை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது வடமலை ஆலமரத்தடி அருகே மர இடத்தில் அமர்ந்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த வடமலையை சேர்ந்த சரவணன் (வயது 48), சுரேஷ் (35), தீரன் (34), சந்திரன் (55) ஆகிய 4 பேரையும் பிடித்து ஆட்டக்களத்தில் கிடந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Tags:    

Similar News