செய்திகள்
விராட் கோலி

4 அல்லது 5 போட்டிகள் என்றாலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விராட் கோலி

Published On 2019-09-15 15:38 GMT   |   Update On 2019-09-15 15:38 GMT
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 30 போட்டிகளே உள்ளதால் இளைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அணியை ஆயத்தப்படுத்தும் பணியை அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது.

இன்னும் 30 போட்டிகளே உள்ளதால் அதற்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி காம்பினேசன் கொண்ட அணியை தயார்  செய்ய விரும்புகிறது.

இந்நிலையில் ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என கருதக்கூடாது. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் நாம் இன்னும் 30 போட்டிகளில் விளையாட உள்ளோம். அணியின் பார்வையில் எல்லாம் தெளிவாக உள்ளது. நான் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போது கூட 15 வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததில்லை.

நான்கு அல்லது ஐந்து வாய்ப்புகள் கிடைத்தால் கூட கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரியாக உயர்நிலை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு வீரர்களும் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அணி அந்த மனநிலையில்தான் உள்ளது. வீர்கள் கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அணியில் தனக்காக இடங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை நுண்ணியமாக கையாள வேண்டும். ஆனால், 30 போட்டிகளே உள்ளதால் முக்கியமானது’’ என்றார்.
Tags:    

Similar News