ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

வீரபாண்டியில்காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2020-09-17 06:00 GMT   |   Update On 2020-09-17 06:00 GMT
வீரபாண்டி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வீரபாண்டி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலையில் மகா கணபதி வழிபாடு, கலச பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இரண்டாம் நாள் காலை கோ பூஜை, லட்சுமி குபேர ஹோமம், மற்றும் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வீரபாண்டி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் முன்னின்று செய்தனர்.
Tags:    

Similar News