செய்திகள்
கவுசிக் காந்தி

கவுசிக் காந்தி, ஜெகதீசன் அபாரம் -சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு

Published On 2021-08-01 15:52 GMT   |   Update On 2021-08-01 15:52 GMT
அதிரடியாக ஆடிய கவுசிக் காந்தி 31 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசினார்.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். கவுசிக் காந்தி 31 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசினார். இதேபோல் ஜெகதீசன் 27 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.

சோனு யாதவ் (6), ராஜகோபால் சதீஷ் (11), ஹரிஷ் குமார் (6), ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் (0) ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

திண்டுக்கல் தரப்பில் எம்.சிலம்பரசன் 2 விக்கெட் வீழ்த்தினார். ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், ஹரிஹரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  இதையடுத்து 160 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
Tags:    

Similar News