செய்திகள்
தற்கொலை

திருச்செங்கோடு அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-11-29 05:03 GMT   |   Update On 2020-11-29 05:03 GMT
திருச்செங்கோடு அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே சிறுமொளசி பாரத் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (22). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு உஷா அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் உஷா கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் மாணிக்கத்தின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News