வழிபாடு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா

Published On 2022-04-06 06:57 GMT   |   Update On 2022-04-06 06:57 GMT
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கோவிலில் பங்குனி மாத திருவிழா இன்று காலை திருப்பள்ளியுணர்த்தலுடன் நடைபெறுகிறது.

மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரு திருக்கொடியேற்றுகிறார். மாலை 7 மணிக்கு ராமாயண பாராய ணம், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

2-ம் திருவிழா நாள் (7.ந்தேதி) காலை 8 மணிக்கு நாராயணீய பாராயணம், காலை 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், மாலை 6 மணிக்கு விப்ர நாராயண இராமானுஜதாசன் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி ஆகியன நடக்கிறது.

3-ம் நாள் (8-ந் தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவும், 4-ம் நாள் (9-ந் தேதி) மாலை 6 மணிக்கு பரதநாட்டியம், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல்,
 
இரவு 10 மணிக்கு சீதா சுயம்வரம் கதகளி, 5-ம் நாள் (10-ந் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவபலி தரிசனம், , இரவு 7 மணிக்கு பக்தி கானா மிர்தம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்று, இரவு 9 மணிக்கு சுவாமி கருட வாக னத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு கர்ணசபதம் கத களி ஆகியன நடைபெறுகிறது.

6-ம் திருவிழா நாள் (11-ந் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவபலி தரிசனம், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியனவும், 7-ம் திருவிழா நாள் (12-ந் தேதி) காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை,

11 மணிக்கு திருவனந்தபுரம் கவடியார் அரண்மனை சார்பில் சிறப்பு உற்சவபலி தரிசனம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு கீசக வதம் கதகளி ஆகியனவும்,

8-ம் திருவிழா நாள் (13-ந் தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

9-ந் திருவிழா நாள் (14-ந் தேதி) காலை 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 8 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 9.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், இரவு 12 மணிக்கு கிராதம் கதகளி, 10-ந் திருவிழா நாளில் (15-ந் தேதி) காலை 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் அரச குடும்ப பிரதிநிதி, கதகளி கலைஞர் முன் செல்ல துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேள தாளத்துடன், ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ண சுவாமியும் பக்தர்கள் புடை சூழ ஆறாட்டுக்கு எழுந் தருளல் நடக்கிறது. பவனி கழுவன் திட்டை, தோட்ட வாரம், வழியாக மூவாற்று முகம் ஆற்றை சென்றடைந்து அங்கு ஆறாட்டு நடக்கிறது. பின்னர் கோயிலுக்கு சுவாமி வருகை தந்த பின்னர் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News