செய்திகள்
பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமாநில தொழிலாளி - வாலிபர் பலி
பல்லடம் பஸ் நிலையம் அருகே செல்லும் போது சாலையில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளி கிஷன்சிங் என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
பல்லடம்:
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் (வயது 20), ரிஷிராம் (22). வேலை விஷயமாக பல்லடம் வந்த அவர்கள், அங்கு பணிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை கோவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப் பட்டனர். ரிஷிராம் மோட்டார் சைக்கிளை ஓட்ட, ஸ்ரீராம் பின்னால் அமர்ந்திருந்தார்.
பல்லடம் பஸ் நிலையம் அருகே செல்லும் போது சாலையில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளி கிஷன்சிங் (64) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கிசன்சிங், ஸ்ரீராம் ஆகியோர் இறந்தனர். ரிஷிராமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.