தொழில்நுட்பம்
சியோமி ரோலபில் ஸ்மார்ட்போன்

ரோலபில் ஸ்மார்ட்போனிற்கு காப்புரிமை பெற்ற சியோமி

Published On 2020-12-12 05:46 GMT   |   Update On 2020-12-12 05:46 GMT
சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மா்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பம் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் இருந்து டிஸ்ப்ளேவை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டது ஆகும்.

இந்த காப்புரிமை 'Terminal with flexible screen' எனும் தலைப்பில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி 2020, அக்டோபர் 29 ஆம் தேதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சர்வதேச காப்புரிமை அலுவலக தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

காப்புரிமை விவரங்களின் படி இந்த சாதனம் ரோலபில் பிளெக்சிபில் டிஸ்ப்ளே, பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் ரோலபில் ஸ்கிரீனை அகல வாக்கில் 200 சதவீதம் வரை நீட்டிக்க முடியும்.
 
முன்னதாக முன்புறம் சுழலும் வகையில் குவாட் கேமரா சென்சார் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி பெற்று இருந்தது. இதுதவிர உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சீனாவில் பெற்று இருக்கிறது.

Tags:    

Similar News