ஆன்மிகம்
கோவில் கோபுரம் மின்னொளியில் ஜொலிப்பதையும், இரு கருட சேவையில் சாமி அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் 28-ந்தேதி தேரோட்டம்

Published On 2021-03-25 08:49 GMT   |   Update On 2021-03-25 08:49 GMT
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவில் வருகிற 28-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகின்றது.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள் பாலித்தார். விழாவையொட்டி தினமும் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆதிஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமர் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். விழாவில் இன்று மாலை பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. விழா வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News