செய்திகள்
மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 15 மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-10-22 07:54 GMT   |   Update On 2021-10-22 08:59 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

குமரிக்கடல் பகுதியையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

24-ந் தேதி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், நாமக்கல், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


25, 26-ந் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News