செய்திகள்
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -பாறை விழுந்ததில் பெண் படுகாயம்
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
தைபே:
தைவான் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யிலன் அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகாக பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. மலைப்பகுதிகளில் அதிர்வு காரணமாக பாறைகள் சரிந்து விழுந்தன. ஹுவாலியன் கவுண்டியில் கார் மீது பாறைகள் விழுந்ததில் ஒரு பெண் பலத்த காயமடைந்துள்ளார்.