செய்திகள்
நீச்சல் குளம்

பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் செயல்பட தடை

Published On 2020-10-09 02:33 GMT   |   Update On 2020-10-09 02:33 GMT
நாடுமுழுவதும் வரும் 15-ம்தேதி முதல் திறக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

நாடுமுழுவதும் வரும் 15-ம்தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. இதற்கிடையே பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

* பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட தடை.

* பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும்.

* பொழுதுபோக்கு  பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

* கர்ப்பிணிகள், 65வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி தரக்கூடாது.

* பொழுதுபோக்கு பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.

* பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News