செய்திகள்
உத்தனப்பள்ளி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை
உத்தனப்பள்ளி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா இருதாளம் பக்கமுள்ள தாசன்புரத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் மற்றும் அவருடைய மகன்களுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்து அவரது சகோதரர் மற்றும் அவரது மகன்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் லட்சுமய்யா தனது நிலத்தில் உள்ள கால்நடை கொட்டகைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் தோட்டத்திற்கு சென்ற அங்கு கொட்டகையில் உடல் எரிந்த நிலையில் லட்சுமய்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமய்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உத்தனப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை தாலுகா இருதாளம் பக்கமுள்ள தாசன்புரத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் மற்றும் அவருடைய மகன்களுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்து அவரது சகோதரர் மற்றும் அவரது மகன்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் லட்சுமய்யா தனது நிலத்தில் உள்ள கால்நடை கொட்டகைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் தோட்டத்திற்கு சென்ற அங்கு கொட்டகையில் உடல் எரிந்த நிலையில் லட்சுமய்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமய்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உத்தனப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.