செய்திகள்
கேரளாவில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தமிழக தம்பதி
கேரளாவில் தமிழக தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தம்பதி இறந்து கிடந்த வீட்டில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டிக்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுதீஷ் (வயது 30).
தமிழகத்தை சேர்ந்த சுதீஷ், குட்டிக்கல் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கிராணி என்ற ரேஷ்மா(20).
சுதீஷ் நேற்று தற்கொலை செய்து கொள்ள போவதாக அவரது நண்பர் ஒருவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். அவர் உடனே இது பற்றி தளிப்பரம்பு போலீசாரிடம் தெரிவித்தார்.
தளிப்பரம்பு போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சுதீஷ் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். அவரது மனைவி ரேஷ்மா விஷம் குடித்து பிணமாக கிடந்தார்.
இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் பற்றி தளிப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதீஷ் - ரேஷ்மா இறந்து கிடந்த வீட்டில் சுதீஷ் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் மனைவி இறந்து விட்டதால் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த தகவல் தமிழகத்தில் உள்ள உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டிக்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுதீஷ் (வயது 30).
தமிழகத்தை சேர்ந்த சுதீஷ், குட்டிக்கல் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கிராணி என்ற ரேஷ்மா(20).
சுதீஷ் நேற்று தற்கொலை செய்து கொள்ள போவதாக அவரது நண்பர் ஒருவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். அவர் உடனே இது பற்றி தளிப்பரம்பு போலீசாரிடம் தெரிவித்தார்.
தளிப்பரம்பு போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சுதீஷ் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். அவரது மனைவி ரேஷ்மா விஷம் குடித்து பிணமாக கிடந்தார்.
இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் பற்றி தளிப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதீஷ் - ரேஷ்மா இறந்து கிடந்த வீட்டில் சுதீஷ் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் மனைவி இறந்து விட்டதால் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த தகவல் தமிழகத்தில் உள்ள உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.