ஆன்மிகம்
குத்தாலம் அருகே முருகன் தோட்டத்தில் நல்லசிவமூர்த்தி அய்யனார் கோவில் குடமுழுக்கு

குத்தாலம் அருகே முருகன் தோட்டத்தில் நல்லசிவமூர்த்தி அய்யனார் கோவில் குடமுழுக்கு

Published On 2021-04-30 03:59 GMT   |   Update On 2021-04-30 03:59 GMT
குத்தாலம் அருகே முருகன் தோட்டத்தில் நல்லசிவமூர்த்தி அய்யனார் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த நல்ல சிவமூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புணரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, குடமுழுக்கு விழா கடந்த 27-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று வந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. இதேபோல முருகன் தோட்டம் கிராமத்தில் பிடாரி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடந்தது.

Tags:    

Similar News