உள்ளூர் செய்திகள்
தி.மு.க. அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
தி.மு.க. அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. மாநில தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கி, திருவள்ளுவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஏ.கே.குமார், செந்தில்குமார், சண்.குமரவேல், பெல்லாரி கலியபெருமாள், குணா திலீபன், சுந்தரி அல்லிமுத்து, அமுதா குமார், பொருளாளர் லோகையன். எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ். சரவணன, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருள்செல்வி, கோகுல், பழனி, பிரபாகரன், சத்தியா ஆறுமுகம், குப்புசாமி, ரவீந்திரன், பாஸ்கர், டாக்டர் நித்தீஷ், மாநில பிரச்சார குழு செய லாளர் நளினி சாரங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.