செய்திகள்
ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும்

Published On 2021-04-20 14:30 GMT   |   Update On 2021-04-20 14:30 GMT
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 'இரவு நேர ஊரடங்கு' தொடங்க உள்ள நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்குவதில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று தெரிவித்தார். ஆனால் மற்றொரு சங்கத்தின் தலைவர் அப்சல், ஆம்னி பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கும் என்று தெரிவித்து இருந்தார். இதனால் ஆம்னி பேருந்துகள் நாளை இயங்குமா அல்லது இயங்காதா என்ற குழப்பம் மக்களிடையே  ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார். மேலும் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News