செய்திகள்
போலீசார் விசாரணை

முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை

Published On 2020-12-19 03:41 GMT   |   Update On 2020-12-19 03:41 GMT
முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் நிலையத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:

சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று இரவு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், ‘‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழர் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். எனவே, அவரை மனித வெடிகுண்டாக மாறி நான் கொலை செய்வேன்’’ என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில் சென்னை கே.கே.நகரில் இருந்து பிரவீன்குமார் என்றும் எழுதியிருந்தது. மேலும், அதில் செல்போன் எண்ணும் இருந்தது. அந்த எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது எதிர்புறத்தில் ஒருவர் அழைப்பை எடுத்து பேசினார். ஆனால் உடனடியாக அவர் இணைப்பை துண்டித்து விட்டார். இந்த மர்ம கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடிதத்தால் அந்த போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News