உள்ளூர் செய்திகள்
எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

Published On 2022-04-15 07:30 GMT   |   Update On 2022-04-15 07:30 GMT
பிறந்தநாளையொட்டி எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை - விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
நாகர்கோவில்:

முன்னாள் எம்.பி. மறைந்த வசந்தகுமார் பிறந்த நாள் விழா நேற்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்த நாளையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமார் நினைவிடத்தில் உள்ள மணி  மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் எம்.பி. வசந்த குமாரின் மகனும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய்வசந்த் மற்றம் காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தகுமார் நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு நிறுவப்பட்டிருந்த வசந்த குமார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து வசந்த குமாரின் மனைவி தமிழ் செல்வி, மகன் வினோத் குமார் மகள் தங்கமலர் ஜெகநாத் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். வசந்தகுமார் நினைவிடத்தில் விஜய்வசந்த் எம்.பி. மற்றும் வசந்தகுமார் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

குமரி வசந்தகுமார், அதெலடிக் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல் வசந்த குமார் மணிமண்டபம் வரை மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மணி மண்டபம் அருகில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News