உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், மணக்கால் கிராமத்தை சார்ந்த கருணாநிதி முத்துலெட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகன் கருப்பசாமி கடந்த ஏப்ரல் மாதம் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் மாற்றியில் கைப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார்.
பல மாத மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கருப்பசாமியின் வலது கை அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கருப்பசாமியின் தந்தை கருணாநிதி கலெக்டரின் பொதுமக்கள் குறைதீற்கும் கூட்ட நாளில் தன் மகனுக்கு செயற்கை கை பொருத்த வேண்டி மனு அளித்தார்.
இதனையடுத்து சென்னை யில் உள்ள செயற்கை கை செய்யும் நிறுவனமான சன் ஆர்த்தோடிக்ஸ் மற்றும் ரிஹாப் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரும் முடநீக்கு வல்லுனரான ஜெயவேலால் கருப்பசாமிக்கு பரிசோதித்து செயற்கை கை அளவீடு முதலிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கருப்பசாமிக்கு வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூ.65,000- மதிப்பிலான அதிநவீன செயற்கை கை வரவைக்கப்பட்டு அரியலூர் மாவட்ட கலெக்டரால் கருப்பசாமிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருப்பசாமியும் அவரது தந்தையும் கலெக்டருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வின்போது 25 காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.40,750- மதிப்பிலான காதொலி கருவியும் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்றிதழ் கலெக்டரால் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், மணக்கால் கிராமத்தை சார்ந்த கருணாநிதி முத்துலெட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகன் கருப்பசாமி கடந்த ஏப்ரல் மாதம் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் மாற்றியில் கைப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார்.
பல மாத மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கருப்பசாமியின் வலது கை அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கருப்பசாமியின் தந்தை கருணாநிதி கலெக்டரின் பொதுமக்கள் குறைதீற்கும் கூட்ட நாளில் தன் மகனுக்கு செயற்கை கை பொருத்த வேண்டி மனு அளித்தார்.
இதனையடுத்து சென்னை யில் உள்ள செயற்கை கை செய்யும் நிறுவனமான சன் ஆர்த்தோடிக்ஸ் மற்றும் ரிஹாப் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரும் முடநீக்கு வல்லுனரான ஜெயவேலால் கருப்பசாமிக்கு பரிசோதித்து செயற்கை கை அளவீடு முதலிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கருப்பசாமிக்கு வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூ.65,000- மதிப்பிலான அதிநவீன செயற்கை கை வரவைக்கப்பட்டு அரியலூர் மாவட்ட கலெக்டரால் கருப்பசாமிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருப்பசாமியும் அவரது தந்தையும் கலெக்டருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வின்போது 25 காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.40,750- மதிப்பிலான காதொலி கருவியும் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்றிதழ் கலெக்டரால் வழங்கப்பட்டது.