செய்திகள்
ஜெயராமன் பிணமாக கிடக்கும் காட்சி

போதையில் குளிக்கசென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலி

Published On 2019-11-19 11:49 GMT   |   Update On 2019-11-19 11:49 GMT
பெரும்பாலை அருகே போதையில் குளிக்க சென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்:

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள கலப்பம்பாடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50). மத்தளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் பெரும்பாலை அருகே உள்ள கொப்பலூரில் ஒரு இறுதிச் சடங்கில் மத்தளம் அடித்துவிட்டு, பின்னர் இரவு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழாவதுமயில் என்கிற இடத்தில் உள்ள வீராசாமி என்பவரது விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஜெயராமன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கிணற்றில் தவறிவிழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார், பென்னாகரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின்னர், ஜெயராமனின் சடலம் மீட்கப்பட்டார். பின்னர், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவர் அப்பகுதி கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News