செய்திகள்
கோப்புப்படம்

சேவூர் அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-03-01 22:37 GMT   |   Update On 2021-03-01 22:37 GMT
சேவூரில் முதல் நாளான நேற்று அரசு மருத்துவமனையில் பொது மக்கள் 20 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சேவூர்

சேவூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதையடுத்து நேற்று முதல் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

சேவூரில் முதல் நாளான நேற்று பொது மக்கள் 20 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொரோனா தடுப்பூசி போட விரும்புகிற பொதுமக்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வயது சான்று உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும்.
Tags:    

Similar News