செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

திருப்போரூர் அருகே வீட்டில் புகுந்து நகை திருட்டு

Published On 2020-09-29 12:03 GMT   |   Update On 2020-09-29 12:03 GMT
திருப்போரூர் அருகே வீட்டில் புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் இள்ளலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 38). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான ஈச்சங்காடு கிராமத்திற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News