லைஃப்ஸ்டைல்
வீட்டில் இருந்தே வேலையா? இதோ மனச்சோர்வை குறைக்கும் உணவுகள்

வீட்டில் இருந்தே வேலையா? இதோ மனச்சோர்வை குறைக்கும் உணவுகள்

Published On 2020-10-11 04:30 GMT   |   Update On 2020-10-10 05:57 GMT
வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவு பொருட்களை உட்கொண்டே குறைக்கலாம். அதுபற்றி பார்க்கலாம்.
வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவு பொருட்களை உட்கொண்டே குறைக்கலாம். அதுபற்றி பார்க்கலாம்.

1. பாதாம் பருப்பு:

இதில் அளவுக்கு அதிகமாக மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு ஏற்படும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக்கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

2. கடல் உணவு:

கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது சற்று ரிலாக்ஸ் ஆக இருப்ப தோடு, சற்று புத்துணர்ச்சியோடும் இருக்கும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.

3. பால்:

மனச்சோர்வோடு இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருளான தயிரை உணவில் அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.

4. சிக்கன்:

இதுவரை நாம் சிக்கன் உண்பது உடல் நலத்திற்கு நல்லது என்று யார் சொல்லியும் கேட்டிருக்க மாட்டோம். ஆனால் இப்போது சிக்கன் பிடித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சிக்கனில் அதிகமாக புரோட்டீன், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட் இருப்பதால், இது மனதை அமைதிப்படுத்தி, ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

5. கார்போ ஹைட்ரேட்:

உடல் எடை குறைய வேண்டுமென்று கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். கார்போஹைட்ரேட் உள்ள உணவு எடையை அதிகரிக்கும் தான், ஆனால் அதே சமயம் கொஞ்சம் கூட சேர்க்காமல் இருக்க கூடாது. இதனால் மனச்சோர்வு தான் ஏற்படும்.

6. சாக்லேட்:

மனச்சோர்வு குறைய சாக்லேட் கூட ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டிடிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும் போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்ட மின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
Tags:    

Similar News