செய்திகள்
மின்சார நிறுத்தம்

மங்களமேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2021-09-21 11:54 GMT   |   Update On 2021-09-21 11:54 GMT
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர். டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News