ஆன்மிகம்
ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் வைபவம்

Published On 2019-12-10 05:54 GMT   |   Update On 2019-12-10 05:54 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியான கவுசிக ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர்காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோவில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 வைணவ திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில் 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு இந்த வைபவம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவது வழக்கமாகும்.

அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, 12 ஆழ்வார்கள் மற்றும் சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றப்பட்டது. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News