ஆன்மிகம்
பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2020-11-17 06:35 GMT   |   Update On 2020-11-17 06:35 GMT
பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு 9.48 மணிக்கு குருபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 9.48 மணிக்கு குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News