செய்திகள்
கோவையில் தனியார் கம்பெனியில் ரூ.19 லட்சம் மோசடி: மேலாளருக்கு வலைவீச்சு
கோவையில் தனியார் கம்பெனியில் போலி ரசீது தயாரித்து ரூ.19 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை செல்வபுரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மேலாளராக சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் 2017-19 காலகட்டத்தின் போது போலியாக ரசீது தயாரித்து ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தணிக்கையின் போது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் நடேஷ்குமார் செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.