செய்திகள்
7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புரெவி புயல்- பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2020-12-02 03:25 GMT   |   Update On 2020-12-02 03:25 GMT
வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Tags:    

Similar News