செய்திகள்
தற்கொலை

விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

Published On 2019-09-07 08:55 GMT   |   Update On 2019-09-07 08:55 GMT
சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

ராமாபுரம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் இக்பால் (வயது 24) டிரைவர்.

இவர் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை அருகே உள்ள என்எஸ்கே தெருவில் நண்பருடன் தங்கி மினி வேன் ஓட்டி வந்தார். நேற்று இரவு வேலைக்கு சென்ற நண்பர்கள் இன்று அதிகாலை வீடு திரும்பியபோது இக்பால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இக்பால் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டாராம். இதனால் மனவேதனை அடைந்த இக்பால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News