ஆன்மிகம்
சிவகிரிபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகிரிபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-22 03:08 GMT   |   Update On 2021-03-22 03:08 GMT
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்ரமணியர் கோவில் பங்குனி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்ரமணியர் கோவில் பங்குனி தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் வரசின்னத்தம்பியார், ராணிபாலகுமாரி நாச்சியார், கணக்கர் குரு சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், துணைத் தலைவர் விக்னேஷ் ராஜா, செயலாளர் சுந்தரராஜன், துணைச் செயலாளர் கற்பக சுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் விழா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜமீன்தார் விக்னேஷ் வரசின்ன த்தம்பியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள் 28-ந் தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது.


Tags:    

Similar News