செய்திகள்
கோப்புபடம்.

குன்னத்தூரில் மர்மமான முறையில் இறந்த பூனை - நாய்கள்

Published On 2021-09-20 09:27 GMT   |   Update On 2021-09-20 09:27 GMT
விலங்கு நல ஆர்வலர் அருண்பிரகாஷ் குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் செல்லம்மாள் நகர் மற்றும் செல்வகுமாரசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரம் நிறைய தெரு நாய்கள் சுற்றி வருகின்றது. 

சம்பவத்தன்று அடுத்தடுத்து தெருநாய்கள், பூனை ஆகியவை மர்மமாக இறந்தன. 8 நாய்கள், ஒரு பூனை என 9 வளர்ப்பு பிராணிகள் இறந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாய், பூனைகளுக்கு யாராவது விஷம் வைத்து கொன்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தெரியாமல் மர்மமாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் அருண்பிரகாஷ் குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கால்நடை டாக்டர் சோமசுந்தரம் தலைமையிலான மருத்துவ குழுவினர் புதைக்கப்பட்ட சில நாய்களின்உடலை தோண்டி, உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளார். அதன் முடிவில் நாய்கள் எப்படி இறந்தது என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News