செய்திகள்
துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்ட காட்சி.

துப்புரவு பணியாளர்கள், பொறியாளர் பிரிவு ஊழியர்கள் ஆரணி நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2021-07-16 16:00 GMT   |   Update On 2021-07-16 16:00 GMT
துப்புரவு பணியாளர்கள், பொறியாளர் பிரிவு ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆரணி நகராட்சி ஆணையாளரை முற்றுைகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணி நகராட்சியில் ேவலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளமும், பொறியாளர் பிரிவு ஊழியர்களுக்கு 2 மாத சம்பளமும் வழங்காமல் நிலுவையில் உள்ளது. நிலுைவயில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 10.30 மணியளவில் துப்புரவுப் பணியாளர்கள், பொறியாளர் பிரிவு ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் தங்களின் சேம நலநிதியில் இருந்து கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த 100 பேருக்கும் வழங்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அலுவலக அறையில் அமர்ந்திருந்த ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜை சூழ்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அழைத்து நகராட்சி ஆணையாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். உங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை வருகிற திங்கட்கிழமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், துப்புரவுப் பணியாளர்கள் முழு மனதோடு நகரில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுங்கள், உங்களால் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

கொரோனா காலம் என்பதால் பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி, நகராட்சி கடைகளில் இருந்து வாடகை பாக்கி, குழாய் வரி பாக்கி, குத்தகை இன நிலுவை பாக்கிகள் உள்பட வரவேண்டிய நிலுவை பாக்கிகள் உள்ளிட்டவைகள் நகராட்சிக்கு அவர்களாகவே முன்வந்து செலுத்தினால் மட்டுமே தங்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. அரசிடம் இருந்து தற்போது எந்த நிதியும் வரவில்லை. வந்ததும் உங்களுடைய கோரிக்கைகளுக்கான சேமநலநிதி பணமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News