செய்திகள்
விபத்து பலி

திருப்பத்தூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

Published On 2021-09-27 13:56 GMT   |   Update On 2021-09-27 13:56 GMT
திருப்பத்தூரில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே தென்கரையைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் முருகவேல் (வயது 45). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சுப்பன் என்பவருடன் தென்கரை அருகே குறுக்குச் சாலையிலிருந்து மெயின் சாலையை கடந்தார். அப்போது நிலைதடுமாறி முருகவேல் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் சிராயல் புதூரிலிருந்து வந்த கார் முருகவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுப்பன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாண்டியனிடம் நாச்சியாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவிடையார்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் தண்டாயுதபாணி(34). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தேவாரம்பூர் விலக்கு என்ற இடத்தை கடக்கும் போது எதிரே குறிஞ்சிநகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தண்டாயுதபாணி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். முத்துப்பாண்டி பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பத்தூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர்.
Tags:    

Similar News