ஆன்மிகம்
சந்தனமாரியம்மன்

ஆழ்வார்தோப்பு கட்டயம் புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-09-11 07:36 GMT   |   Update On 2021-09-11 07:36 GMT
ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு கட்டயம் புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், வில்லிசை நிகழ்ச்சியும், நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீ.வ.ஆழ்வார்தோப்பு கட்டயம்புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. முதல்நாள் திருவிழாவில் குடியழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

மறுநாள் காலை 8 மணிக்கு அன்னதானமும், காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மதியக் கொடையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், வில்லிசை நிகழ்ச்சியும், நடைபெற்றது.

இரவு 12 மணிக்கு நள்ளிரவு சாமக்கொடையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 3-ம் நாள் காலை 8 மணிக்கு அன்னதானமும், காலை10 மணிக்கு கிடாவெட்டும் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளுடன் கொடை விழா நிறைவு பெற்றது.
Tags:    

Similar News