ஆன்மிகம்
புனித அந்தோணியார்

பொழிக்கரை புனித அந்தோணியார் கிறிஸ்தவ ஆலய விழா

Published On 2021-02-01 02:31 GMT   |   Update On 2021-02-01 02:31 GMT
ஈத்தாமொழி அருகே பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா முக்கிய நிகழ்ச்சியான புனிதரின் தேர்பவனி இன்று நடைபெறும்.
ஈத்தாமொழி அருகே பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. திருவிழாவில் நேற்று மாலை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இரவு தேர் பவனி நடந்தது.

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  கோட்டார் சமூக சேவை சங்க இயக்குனர் மைக்கேல் ராஜ் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 11 மணிக்கு புனிதரின் தேர்பவனி நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானசேகரன் தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News