செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நாளை தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

Published On 2019-09-19 10:22 GMT   |   Update On 2019-09-19 10:22 GMT
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் நாளை தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் நாளை (20-ந் தேதி) தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த இளைஞர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் டி பிளாக்கில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பயனடையலாம்.

இம்முகாம் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

மேற்கண்டவாறு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News