ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

நத்தத்தில் செல்வ விநாயகர், மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-01-30 07:26 GMT   |   Update On 2021-01-30 07:26 GMT
நத்தம் கர்ணம் தெருவில் உள்ள செல்வ விநாயகர், மதுர காளியம்மன், பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம் கர்ணம் தெருவில் உள்ள செல்வ விநாயகர், மதுர காளியம்மன், பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நத்தம் அரண்மனை சந்தன கருப்புசாமி கோவிலில் இருந்து சாமி சிலைகள், 108 கோவில் தீர்த்தங்களுடன் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளம் முழங்க செல்வ விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

மேலும் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரை கோபுர உச்சிக்கு எடுத்து சென்ற சிவாச்சாரியார்கள், அதை கோபுர கலசத்திற்கு ஊற்றி வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News